ஸ்டாலினுக்கு நடந்த அவமானத்தை உடைத்துப் பேசிய சீமான்….!! 

Estimated read time 1 min read

கர்நாடகாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்துப் பேசிய சீமான், “நான் சோற்றில் உப்புப் போட்டுச் சாப்பிடுபவன், அதனால் எனக்கு அந்த ரோஷம் இருக்கிறது. நான் வாட்டர் (Water) குடிக்க மாட்டேன்.

தண்ணீர்தான் குடிப்பேன்; ரைஸ் (Rice) சாப்பிட மாட்டேன், சோறுதான் சாப்பிடுவேன்” என்று தனது உணர்ச்சியை ஆவேசமாக வெளிப்படுத்தினார். காங்கிரஸ் வெற்றிக்காகக் கர்நாடகா சென்ற முதலமைச்சருக்கு அங்கே ‘செருப்பு மாலை’ போட்டு அவமதிப்பு செய்துள்ளதாகச் சாடிய அவர், மானம், மரியாதை உள்ள எவரும் இதைச் சகித்துக்கொள்ள மாட்டார்கள் என முழங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், அன்று பேரறிஞர் அண்ணாவையே “என்னை யாராலும் தோற்கடிக்க முடியாது” என்று ஆணவத்துடன் அவமதித்த அதே காங்கிரஸ்தான் இன்றும் திமுகவை இழிவுபடுத்துவதாகக் குற்றம் சாட்டினார். இவ்வளவு பெரிய அவமானங்களைச் சந்தித்த பிறகும், இன்னும் அந்தக் கூட்டணியில் நீடிப்பது வேதனையாக இருப்பதாகவும், தமிழர்கள் தங்கள் தன்மானத்தை அடகு வைக்கக் கூடாது என்றும் காரசாரமாகத் தனது உரையை நிறைவு செய்தார். சீமானின் இந்த “உப்பு, சோறு, தண்ணீர்” அரசியல் பேச்சு தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author