9.30 மணி வரை வாடிவாசல் ஏன் திறக்கப்படவில்லை? ஆர்.பி.உதயகுமார் வைத்த அதிரடி குற்றச்சாட்டு..!! 

Estimated read time 0 min read

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், அப்போதுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் கூறினார்.

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மன்னராட்சி காலம் தொட்டு மக்கள் திருவிழாவாகவே நடந்து வருகின்றன. ஆனால், தற்போது இது உதயநிதிக்காகவும், மு.க.ஸ்டாலினுக்காகவும் நடத்தப்படும் போட்டிகளாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் விமர்சித்தார்.

குறிப்பாக, பாலமேடு ஜல்லிக்கட்டு வழக்கப்படி காலை 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும், ஆனால் 9.30 மணி வரை வாடிவாசல் திறக்கப்படாதது மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தி.மு.க அரசு தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து ஜல்லிக்கட்டை ஒரு வேடிக்கை நிகழ்வாக மாற்றிவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஜனநாயகம் மலர இந்த தைத்திருநாளில் நாம் உறுதி ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்1.

Please follow and like us:

You May Also Like

More From Author