தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்ததும், திமுக அரசின் மோசடிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது தமிழக மக்களுக்கு சில உத்தரவாதங்களை அளிக்க வந்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி,தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த உடனேயே சட்டம் ஒழுங்கு சீர் செய்யப்படும் என்றார்.
நில அபகரிப்பு, மணல் கொள்ளை, டாஸ்மாக் முறைகேடு குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார். போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்றும் கூறினார்.
திமுக அரசின் லஞ்சம், பணமோசடி, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, திமுக அரசின் மோசடிகள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
பணி நியமனங்களும் ஒளிவு மறைவற்ற முறையில் நடக்கும் என்றும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
