சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஷான்டௌ நகரில், கணவருடன் ஏற்பட்ட கடும் சண்டையால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியிலிருந்து பல மில்லியன் கணக்கான பணத்தாள்களைக் கீழே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘ஸ்டார் லேக் சிட்டி’ என்ற குடியிருப்பில் நடந்த இந்த மோதலின் போது, நிதானத்தை இழந்த அந்தப் பெண் சுமார் 2 மில்லியன் ஹாங்காங் டாலர்களை (இந்திய மதிப்பில் பல கோடி ரூபாய்) காற்றில் வீசியுள்ளார்.
வானத்திலிருந்து பணத்தாள்கள் மழையெனப் பொழிவதைக் கண்ட அப்பகுதி மக்கள் முதலில் திகைத்து நின்றாலும், அது நிஜமான பணம் என்று தெரிந்ததும் அவற்றைச் சேகரிக்க முண்டியடித்ததால் அந்த இடமே பெரும் போர்க்களமாக மாறியது.
இந்தச் சம்பவத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு குழப்பம் நிலவியதைத் தொடர்ந்து, காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் ‘பண மழை’ என்ற பெயரில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
A post shared by Daily Mail (@dailymail)
“>
ஒரு நிமிட ஆத்திரத்தில் எடுக்கப்பட்ட இந்த விபரீத முடிவு அந்தப் பெண்ணுக்கு மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதோடு, பொதுமக்களுக்கும் தேவையற்ற ஆபத்தை உண்டாக்கியுள்ளது. இது குறித்துப் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
