தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானை தாக்கிய சுனாமி

ஜப்பானின் யோனகுனி தீவில் இன்று காலை, (மார்ச் 3), 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காலை 7.58 மணியளவில் ஹுவாலியனில் இருந்து தென்மேற்காக 18கிமீ தொலைவில் 35 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
இதன் அதிர்வுகள் ஜப்பானின் தைவானைத் தாக்கியது.
கடந்த 1999ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 2,500க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனர்.
அதன் பிறகு 25 ஆண்டுகளில் தைவானைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான்.
நிலநடுக்கத்தால் தைவானின் ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே நேரத்தில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மூடவும் அனுமதி வழங்கப்பட்டது.

You May Also Like

More From Author