தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு மற்ற வகுப்புகளுக்கு வழக்கம் போல் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 3-ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் காரணமாக, ஜூன் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்குப் புதிய பாடத்திட்டம் குறித்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதால் இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பாடநூல்களைப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்துள்ளார். மற்ற வகுப்புகளுக்கான பள்ளித் திறப்புத் தேதியில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் கல்வித்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
