சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் ஆகியோரை, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 25ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் முறையே சந்தித்து பேசினார்.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனை சந்தித்து பேசிய போது வாங்யீ கூறுகையில்,
உலகளவில் தொழில் துறை சங்கிலி மற்றும் வினியோக சங்கிலியின் பாதுகாப்பையும் கடல் சார் பயணத்தின் தடையற்ற நிலைமையையும் பேணிக்காப்பது, உலகின் பல்வேறு நாடுகளின் பொது விருப்பமாகும். இதற்கு சீனா தொடர்ந்து முயற்சி செய்யும் என்றார்.
அப்போது விவியன் பாலகிருஷ்ணன் கூறுகையில்,
மலாக்கா நீரிணை மற்றும் வேறு சர்வதேச கடல் வழி போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு சிங்கப்பூர் ஆதரவளிக்கும். சீன-ஆசியானின் பன்முக நெடுநோக்குக் கட்டாளியுறவை மேலும் பெரும் முன்னேற்றங்களைப் பெறுவதை சிங்கப்பூர் ஊக்குவிக்கும் என்றார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் புதிய நிலைமை குறித்து முனீர் விளக்கமளித்தார். இரு தரப்புகளுக்கிடையில் உடன்படிக்கை வெகுவிரைவில் எட்டப்படக் கூடும் அவர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் என்று வாங்யீ தெரிவித்தார்.
