வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்காண பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி பெரு விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான வைகாசி விசாக திருநாளான இன்று, நள்ளிரவு ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
இதனிடையே வைகாசி விசாக திருநாளை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூருக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
அவர்கள் கடலில் புனித நீராடி, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் பலர் விரதமிருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
