பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் மும்பை பாதாள உலக கும்பலின் கூட்டு நெட்வொர்க்கைச் சேர்ந்த 9 பேரை டெல்லி போலீஸ் சிறப்புப் பிரிவு அதிரடியாகக் கைது செய்துள்ளது.
இவர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள அரசு உள்கட்டமைப்புகள், பாதுகாப்புப் படையினர் மற்றும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப் பெரிய அளவில் சதித் திட்டம் தீட்டியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிடைத்த ரகசியத் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த கூட்டுப் பாதுகாப்புப் படை வேட்டை, நாட்டின் மிக முக்கிய தீவிரவாத சதியை ஆரம்பத்திலேயே முறியடித்துப் பெரும் ஆபத்தைத் தடுத்துள்ளது.
இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்தத் திட்டம்.. டெல்லியில் சிக்கிய 9 பேர்; பதறும் ஐஎஸ்ஐ!
