இனி எல்லாமே டிஜிட்டல் தான்….அண்ணாமலையின் புது வியூகம்….!! 

Estimated read time 0 min read

பாஜகவிலிருந்து விலகிய பின் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துச் சமூக வலைதள நேரலையில் பேசிய அண்ணாமலை, தங்களின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிரச்சார யுக்தி குறித்து மிகத் தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

இனி நாம் சமூக வலைதளங்களை முழுமையாகப் பயன்படுத்தி, மிகத் தீவிரமாக அரசியல் பேசுவோம் என்றும், மக்களுக்கான கருத்துக்களை டிஜிட்டல் தளங்கள் மூலமாக நேரடியாகக் கொண்டு சேர்ப்போம் என்றும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் அவரவர் வழியில் அரசியல் செய்ய எல்லோருக்கும் உரிமை இருக்கிறது என்றும், எல்லாரும் அதைச் செய்யட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாம் நமது தனித்துவமான பாதையில், மக்களைத் திரட்டி, சரியான அரசியல் விழிப்புணர்வை நோக்கிப் பயணிப்போம் என்று அண்ணாமலை தனது புதிய டிஜிட்டல் அரசியல் வியூகத்தை ஓப்பனாக வெளிப்படுத்தியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author