இந்தியாவின் ₹1.25 லட்சம் கோடி பாதுகாப்பு போர் நிதியைப் பயன்படுத்துவதில், முப்படைத் தளபதிகள் மற்றும் கமாண்டர்களின் நிதி அதிகாரங்களை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை அறிவித்த புதிய விதிகளின்படி, ராணுவத்திற்கான கொள்முதல் அதிகார வரம்புகள் 100 சதவீதம் வரை, சில இடங்களில் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
ராணுவத் தளவாடக் கொள்முதலில் ஏற்படும் கால தாமதங்களைக் குறைக்கவும், நாட்டின் எல்லைப் பாதுகாப்புத் தயார்நிலையை மேலும் வலுப்படுத்தவும் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
₹1.25 லட்சம் கோடி போர் நிதி! இந்தியாவின் முப்படைகளுக்கும் கூடுதல் அதிகாரம் கொடுத்த மத்திய அரசு! யாருக்கு எவ்வளவு?
