சமீபத்தில் நிலவி வந்த பிராந்திய மோதல்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகள் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இரு தரப்பிற்கும் இடையேயான அடுத்தகட்ட உயர்மட்டப் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் முன்வந்துள்ளது.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்த இடமாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானின் தொழில்நுட்ப குழுக்களுக்கு இடையேயான இந்த முக்கியச் சந்திப்பு வரும் ஜூலை 11 அன்று இஸ்லாமாபாத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா – ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் நடத்தத் திட்டம்
