ஓணம் பண்டிகை – குருவாயூர் கோயிலில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Estimated read time 0 min read

ஓணம் பண்டிகையையொட்டி திருச்சூர் குருவாயூர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

கேரளத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் முக்கிய நாளான திருவோணம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் குருவாயூர் கோயிலில் குவிந்துள்ளனர்.

பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பொது வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author