ஓணம் பண்டிகை – திருச்சி ஐயப்பன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

Estimated read time 0 min read

ஓணம் பண்டிகையையொட்டி திருச்சி ஐயப்பன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, மலையாள மாதமான சிங்கம் மாதத்தில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வசிக்கும் மலையாள மக்கள் ஓணம் பண்டிகையை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

இதையொட்டி, திருச்சி ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மலையாள மக்கள் குடும்பத்தினருடன் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

You May Also Like

More From Author