இரண்டு நாள் அரசுமுறை பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் தாஷ்கண்டில் உள்ள யோகா கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு யோகா அமர்வில் கலந்துகொண்டார்.
யோகா பயிற்சி மக்கள் மத்தியிலும் இரு நாடுகளின் கலாச்சாரங்களுக்கு இடையிலும் வலுவான பாலமாக செயல்பட்டு வருவதை பிரதமர் பாராட்டிப் பேசினார்.
உஸ்பெகிஸ்தான் மக்களிடையே யோகாவிற்கு அதிகரித்து வரும் வரவேற்பையும், இந்திய-உஸ்பெக் மக்கள் உறவின் ஆழத்தையும் இந்த நிகழ்வு பிரதிபலிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாஷ்கண்டில் யோகா செய்த பிரதமர் மோடி! உஸ்பெகிஸ்தான் பயணத்தில் மிளிர்ந்த கலாச்சார பிணைப்பு
