நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, போதேகோஷி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததால் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள அரசு புதிய அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தத் திடீர் வெள்ள பேரழிவில் நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதிகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800-ஐக் கடந்துள்ளது.
மக்கள் தங்களது தொலைபேசிகளில் தொடர்ச்சியாக வரும் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை மெசேஜ்களால் பெரும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.
நேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: போதேகோஷி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு
