ரஷ்யா தனது நீண்ட தூரம் சென்று தரையிலிருந்து வான் குறிவைத்து தாக்கும் எஸ்-400 “ட்ரியம்ஃப்” ஏவுகணை அமைப்பின் மேலும் ஐந்து அலகுகளை இந்தியாவிற்கு விற்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப்படை (IAF) விடுத்த டெண்டருக்கு பதிலளிக்கும் விதமாக இந்த முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சேவையில் “சுதர்ஷன்” என்று அழைக்கப்படும் எஸ்-400, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானிடமிருந்து வந்த அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக இடைமறித்து தனது திறனை நிரூபித்திருந்தது.
இந்தியாவிற்கு மேலும் எஸ்-400 அலகுகளை ரஷ்யா வழங்க முன்வந்துள்ளது
