மேற்குவங்க மாநிலத்தின் ஜாதவ்பூர் மக்களவை தொகுதி உறுப்பினரும் பெங்காலி நடிகையுமான சயோனி கோஷ், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் தற்போதைய அரசியல் களத்தில் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.
2021 ஆம் ஆண்டு மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சயோனி கோஷ், கட்சியின் இளைஞரணித் தலைவராகப் பணியாற்றியவர்.
2024 மக்களவைத் தேர்தலில் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்பியாக உயர்ந்தார். 2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு பிந்தைய அரசியல் சூழலில், திரிணாமூல் காங்கிரஸ் அதிருப்தி எம்பிக்கள் குழுவில் இணைந்து தனியாக செயல்பட மக்களவை சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய்யுடன் சயோனி கோஷ் சந்திப்பு: கூட்டணி வட்டாரங்களில் எழும் புதிய அரசியல் கேள்விகள்
