நேபாளத்தில் பனிப்பாறை உடைந்ததால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பேரழிவை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்தில் உள்ள 40 பனிப்பாறை ஏரிகள் அதிக அபாயம் கொண்டவையாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
சிக்கிமில் உள்ள 40 அதிக அபாயகரமான ஏரிகளில் 16 ஏரிகள் முதற்கட்டமாக தீவிர அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதில் 7 ஏரிகள் மிகவும் கடுமையான ஆபத்தான நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
17,000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஏரிகளின் ஆழம், நீரின் கொள்ளளவு, பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நிபுணர்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
சிக்கிமில் பனிப்பாறை ஏரிகள் திடீர் வெள்ள அபாயம்: 40 ஆபத்தான ஏரிகளை தீவிரமாகக் கண்காணிக்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்
