மத்திய கிழக்கில் போர் பதட்டம்: ஈராக்கில் இருந்த ஈரான் ஆதரவு படைகள் மீது திடீர் தாக்குதல் 

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் பதட்டம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய ஈராக்கில் இராணுவத் துருப்புக்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான துணைப்படைகள் தங்கியிருந்த ஒரு இராணுவத் தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
நேற்று ஒரே இரவில் “குண்டுவெடிப்பு” மூலம் அந்த இராணுவ தளம் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ராணுவம் இந்த தாக்குதலில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று மறுத்துள்ளது.
கால்சோ தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். எட்டு பேர் காயமடைந்தனர்.
முன்னாள் ஈரானிய ஆதரவு துணை ராணுவக் குழுவான ஹஷெட் அல்-ஷாபி மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author