சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் மே 6-ஆம் நாளிரவில் பிரான்ஸிலுள்ள எலிசே மாளிகையில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில்,
இன்றைய உலகில் அமைதியற்ற நிலை காணப்படுகிறது.
பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை வாய்ப்பாகவே கொண்டு, விளையாட்டுப் போட்டியின்போது உலகளாவிய போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பவையின் நிரந்தர உறுப்பு நாடாகவும், பொறுப்புணர்வுடைய பெரிய நடாகவும் திகழும் சீனா பிரான்ஸுடன் இணைந்து முன்மொழிகிறது.
மேலும், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல், உக்ரைன் நெருக்கடி ஆகியவற்றில் சீனாவின் கோட்பாடு மற்றும் நிலைப்பாட்டை, செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெளிவுபடுத்தினார்.