ஐந்தருவியில் குளிக்க தடையால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தென்காசி மாவட்டம், குற்றாலம் ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

குற்றாலம் மலைப்பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ஐந்தருவியில் தண்ணீரின் அளவு அதிகத்துள்ளது.

இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் ஏமாற்றமடைந்தனர்.

அதேசமயம் பழைய குற்றால அருவி, மெயின் அருவி, புலி அருவியில் தண்ணீர் சீராக கொட்டுவதால், அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படவில்லை.

You May Also Like

More From Author