சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் அக்டோபர் 10ஆம் நாள் ஜியாங்சி மாநிலத்தின் ஜியுஜியாங் நகரில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
இப்பயணத்தில், ஜியுஜியாங் நகரிலுள்ள யாங்சி ஆற்றின் தேசிய பண்பாட்டு பூங்கா, சினோபெக் நிறுவனம் ஆகியவற்றுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, யாங்சி ஆற்றின் பக்கத்தில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் பசுமைசார் வளர்ச்சிக்கான மாற்றம் மற்றும் மேம்பாடு முதலியவை பற்றிய விவரங்களை அவர் கேட்டறிந்தார்.