அமெரிக்கா- சீனா இடையே கடந்த மார்ச் மாதம் அணுசக்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது தெரியவந்துள்ளது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், இருதரப்பிலும் தலா இரு பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் இறையாண்மைமிக்க நாடான தைவானை தங்களது ஒருங்கிணைந்த பகுதியாக சீனா கருதுவது குறித்து இருதரப்பினரும் பேசியுள்ளனர்.
அப்போது தைவானை அச்சுறுத்த அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என அமெரிக்காவிடம் சீனா உறுதியளித்ததாக இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.