கதை தேவையில்லை…தமன்னா ஆடுனா படம் ஹிட்டு! யாரை குறிவைத்து சொல்கிறார் பார்த்திபன்?

Estimated read time 1 min read

தமன்னா : நடிகை தமன்னா கடைசியாக தமிழில் படங்களில் நடித்ததை விட பாடல்களில் நடனமாடியது பெரிய அளவில் பேசப்பட்டு அந்த படங்களின் ப்ரோமோஷனுக்கு உதவியது என்றே சொல்லலாம்.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ மற்றும் அரண்மனை 4 படத்தில் இடம்பெற்ற ‘அச்சச்சோ’ ஆகிய இரண்டு பாடல்களை சொல்லலாம்.

இந்த இரண்டு பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு பகுதியாக உதவியது என்றே சொல்லலாம். படத்திலும் பாடலை கேட்டு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர் என்றே சொல்லலாம்.

இந்த சூழலில், ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் அந்த படத்தில் தமன்னாவை ஆட வைத்தால் போதும் படம் ஹிட் ஆகிவிடும் என சூசகமாக பார்த்திபன் கூறியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் டீன்ஸ் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் தமன்னாவை பற்றி பேசினார்.

யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” இப்போதெல்லாம் ஒரு படம் ஹிட் ஆகவேண்டும் என்றால் கதை சரியாக இருக்கவேண்டும் என்று இல்லை. தமன்னாவை ஆட வைத்தால் போதும் கதை சரியாக இல்லை என்றால் கூட படம் ஹிட் ஆகிவிடும்” என கூறியுள்ளார்.

பார்த்திபன் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் யாரை கூறிவைத்து சொல்கிறார் பார்த்திபன்? எனவும், மேலும், சிலர் ஜெயிலர் படத்தை பார்த்து தான் பார்த்திபன் அப்படி சொல்கிறார் எனவும், ஒரு சிலர் சுந்தர் சியை வைத்து தான் சூசகமாக பார்த்திபன் அப்படி சொல்லியிருக்கிறார் எனவும் கூறிவருகிறார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author