சி ஆன் நகரில் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு வரவேற்பு விருந்து

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் அவரின் மனைவி ஃபெங்லியுவான் சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கேற்கும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் அவர்களது மனைவிகளுக்கு வரவேற்பு விருந்தை 18ஆம் நாள் ஷான்சி மாநிலத்தின் சி ஆன் நகரில் அளித்தனர்.
கசகஸ்தான் அரசுத் தலைவர், கிர்கிஸ்தான் அரசுத் தலைவர் மற்றும் அவரது மனைவி, தாஜிக்ஸ்தான் அரசுத் தலைவர், துர்க்மேனிஸ்தான் அரசுத் தலைவர், உஸ்பேக்ஸ்தான் அரசுத் தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இவ்விருந்தில் பங்கேற்றனர்.
ஷேன்சி என்பது பழைய பட்டுப்பாதையின் துவக்கப் புள்ளியாகும். மத்திய ஆசிய நாடுகளுடன் 2000க்கும் அதிகமான ஆழ்ந்த நட்புறவை அது சாட்சியாக கொண்டுள்ளது என்று ஷிச்சின்பிங் வரவேற்புரை நிகழ்த்திய போது தெரிவித்தார்.
சீன-மத்திய ஆசிய ஒத்துழைப்பை ஆழமாக்குவது உலக முன்னேற்றப் போக்கிற்கும் மக்களின் விருப்பத்துக்கும் பொருத்தமாகும். நமது கூட்டு முயற்சியில் 19ஆம் நாள் நடைபெறவுள்ள சீன-மத்திய ஆசிய உச்சிமாநாடு வெற்றி பெற்று சீன-மத்திய ஆசிய உறவின் புதிய காலத்தைத் துவக்குவதாக நம்புகிறேன் என்று ஷிச்சின்பிங் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author