நவராத்திரி விழா – ஊஞ்சலாடும் அலங்காரத்தில் காட்சியளித்த மதுரை மீனாட்சி அம்மன்!

Estimated read time 1 min read

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவின் 2-ஆம் நாளில் ஊஞ்சலாடும் அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

உலக பிரசித்திப்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவின் ஒவ்வொரு நாளும் பல்வேறு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

அந்த வகையில், நவராத்திரியின் 2ம் நாளில் ஊஞ்சலாடும் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று மீனாட்சியம்மனை தரிசித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author