ஒரே நாடு ஒரே தேர்தல் அரசியலமைப்புக்கு முரணானது அல்ல என்று, குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று பேசினார்.
அப்போது, கடந்த 1967ஆம் ஆண்டு வரை மக்களவை தேர்தல்களுடன் சட்டசபைக்கும் சேர்த்து ஒன்றாக தேர்தல் நடந்தது எனவும், காலப்போக்கில் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவு பயன்படுத்தப்பட்டு சில சட்டசபைகள் கலைக்கப்பட்டதால் சுழற்சி தடைபட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு சிலர் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளதாகவும், இத்திட்டத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒன்றாகச் செயல்படும் கூட்டாட்சி மேலும் வலுப்பெறும் எனவும் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.