மியான்மரின் மேற்குப் பகுதியில் உள்ள ராக்கைன் மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மரில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற குழந்தைகள் உட்பட குறைந்தது 150 ரோஹிங்கியாக்கள் ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடான பங்களாதேஷிற்கு செல்வதற்காக எல்லையைக் கடக்க காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
மேலும், மியான்மர் மற்றும் பங்களாதேஷ் இரண்டையும் பிரிக்கும் நாஃப் நதியில் தப்பியோடிய ரோஹிங்கியாக்களை ஏற்றிச் சென்ற படகும் மூழ்கியது.
இந்த சமபவத்தில் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். மியான்மர் ராணுவத்திற்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் இடையே சண்டை நடந்து வரும் நிலையில், பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இருதரப்பும் எதிராணியினரை குற்றம்சாட்டி வருகின்றனர்.