டெல்லியில் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவி காலம் நிறைவடையவுள்ள நிலையில், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் கடந்த 02ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், தொடக்கம் முதலே டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தது.
இறுதிகட்ட முடிவின் படி பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 வருடங்களுக்கு பின்னர் டெல்லியில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. புதுடில்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியை தழுவியுள்ளார். புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை வீழ்த்திய பர்வேஷ் முதல்வராக வாய்ப்பு? உள்ளதாக தகவல் வெளியானது.