எட்டு மாதங்களுக்கும் மேலாக விண்வெளியில் வாழ்ந்த பிறகு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் பூமிக்கு திரும்பும் நாள் இறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்திய டுடே வெளியிட்டுள்ள சேதியின்படி, நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அடுத்த மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்.
மார்ச் 12 ஆம் தேதி பூமியிலிருந்து ISS நோக்கி செல்லும் Crew-10 மிஷன் ஆறு மாத கால பணிக்காக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) இணைக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
அந்த மிஷனில் விண்வெளிக்கு வரும் ஒரு புதிய விண்வெளி நிலைய தளபதியிடம் இவர்கள் இருவரும் தங்கள் பணியை ஒப்படைப்பார்கள். தற்போது, சுனிதா வில்லியம்ஸ் ISS -இன் தளபதியாக உள்ளார்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பும் தேதி உறுதியானது; விவரங்கள்
