நரேந்திர மோடியை மூத்த அண்ணன் எனக் குறிப்பிட்ட பூட்டான் பிரதமர்  

Estimated read time 1 min read

பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டினார்.
ஸ்கூல் ஆஃப் அல்டிமேட் லீடர்ஷிப் (SOUL) மாநாட்டில் பேசிய டோப்கே, மோடியின் தலைமையைப் பாராட்டினார் மற்றும் அவரது நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தை எடுத்துரைத்தார்.
பூட்டானின் பொது சேவைத் துறையை மாற்றுவதற்கான வழிகாட்டுதலை வழங்க மோடியிடம் கோரிய அவர், மோடியை மூத்த சகோதரர் மற்றும் வழிகாட்டி என்று அழைத்தார்.
மேலும், மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா மற்றும் ஸ்வச் பாரத் போன்ற பிரதமர் மோடியின் முயற்சிகளை அவர் தேசத்தை மாற்றுவதற்கான பரிசுகளாக கருத்துவதாகக் குறிப்பிட்டார்.

Please follow and like us:

You May Also Like

More From Author