ஜப்பானின் வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது.
இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், தண்டவாளங்கள் ஆகியவை பனிபோர்வை போர்த்தியதை போல காணப்படுகின்றன. இதனால், பொது போக்குவரத்து தடை செய்யப்படுவதும், மீண்டும் இயக்கப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
மேலும், அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.