உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், காலியாக இருந்த ‘தனியார் முகாமில்’ தீ விபத்து ஏற்பட்டது.
கும்ப மேளா நடைபெறும் பகுதியை ஒட்டி உள்ள செக்டார் 19 இல் உள்ள ஒரு ‘ஆசிரமத்தில்’ ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கூடாரங்கள் எரிந்து நாசமான இரண்டு நாட்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு தீ விபத்து நிகழ்ந்தது.
இந்த குறிப்பிட்ட விபத்து 8வது செக்டாரில் நடந்ததாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகாத நிலையில், தலைமை தீயணைப்பு அதிகாரி பிரமோத் குமார் சர்மா, இது ஒரு ‘சிறிய’ தீ விபத்து என்றும், அது சிறிது நேரத்திலேயே அணைக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஜனவரி 19 முதல் 5 வது முறையாக கும்பமேளா பகுதியில் தீ விபத்து
