12 நாட்களுக்கு பின் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி!

Estimated read time 1 min read

நெல்லை மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து சீரானதையொட்டி, 12 நாட்களுக்கு பின் மீண்டும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24-ம் தேதி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல கடந்த 2-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 3-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் அருவியில் குளிக்க தடை நீடித்தது. இந்நிலையில் அருவியில் குளிக்க வனத்துறை சார்பில் மீண்டும் அனுமதி வழங்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author