பயங்கரவாத அபாயங்கள் மற்றும் உள்நாட்டு ஆயுத மோதல்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை (மார்ச் 7) அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனை, இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்களைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களை குறிப்பாக வலியுறுத்துகிறது.
அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத குழுக்களின் தொடர்ச்சியான வன்முறையை மேற்கோள் காட்டி, இந்த பகுதிகளை “நிலை 4: பயணம் செய்ய வேண்டாம்” என்று இந்த ஆலோசனை வகைப்படுத்துகிறது.
பாகிஸ்தானுக்கு யாரும் செல்ல வேண்டாம்; அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை
