ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் சீன ஆண்டு

14ஆவது சீன தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் காலத்தில் சீன வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர் கூட்டம் 7ஆம் நாள் நடைபெற்றது. இதில் வாங் யீ கூறுகையில்,

24 ஆண்டு கால வளர்ச்சிக்குப் பிறகு, ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை ஆறிலிருந்து 26ஆக அதிகரித்துள்ளது. உலகில் மிக பெரிய நிலப்பரப்பில் பரவல் செய்து மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட பிரதேச ஒத்துழைப்பு அமைப்பாக ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு மாறியுள்ளது.

இவ்வாண்டு இலையுதிர்காலத்தில், ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு சீனாவின் டியன் ஜின் நகரில் நடைபெறவுள்ளது. ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பு சீனாவிலிருந்து மீண்டும் புறப்பட்டு, எதிர்காலத்தில் மேலும் நெருக்கமான பொது சமூகத்தை உருவாக்கும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author