நடிகர் அஜித் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி….  

Estimated read time 0 min read

டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அஜித்திற்கு பத்மபூஷன் விருதினை வழங்கினார்.

விருதினை பெற்று சென்னைக்கு திரும்பிய அஜித்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அஜித், அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். பத்மபூஷன் விருது பெற்றது மிகவும் மகிழ்ச்சி என கூறினார். அதன் பிறகு செய்தியாளர்கள் கேள்வி கேட்க முயன்ற போது விரைவில் நேரில் சந்திப்போம் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இந்த நிலையில் உடல்நல பரிசோதனைக்காக நடிகர் அஜித் இன்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author