மாஸ்கோவின் விமான நிலையத்தில் ஷி ச்சின்பிங் எழுத்து மூல உரை

Estimated read time 1 min read

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் மே 7ஆம் நாள் மாஸ்கோவின் வுனுகோவோ ஆண்ட்ரி டுபோலேவ் சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்து, எழுத்து மூல உரை நிகழ்த்தினார்.

அப்போது அவர் கூறுகையில், சுமுகமான நட்புறவு, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு, பரஸ்பர நலன் தரும் கூட்டு வெற்றி ஆகியவற்றை மையமாக கொண்ட சீன-ரஷிய ஒத்துழைப்பு எழுச்சியை இரு நாடுகள் உருவாக்கியுள்ளன என்றார். மேலும், தற்சார்பு மற்றும் நிலைத்தன்மை கொண்ட சீன-ரஷிய உறவு, இரு நாட்டு மக்களுக்குப் பெரும் நலன்களைத் தந்துள்ளதோடு, உலக நெடுநோக்கு அமைதியைப் பேணிக்காப்பதற்கும், உலக பலதுருவமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கும் முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற சர்வதேச சூழ்நிலையில், ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச அமைப்புமுறையையும், சர்வதேசச் சட்டத்தை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்கையும்        சீனாவும் ரஷியாவும் கூட்டாக பேணிக்காத்து, மேலாதிக்கவாதம் மற்றும் வல்லரசு அரசியலை உறுதியுடன் எதிர்த்து, உண்மையான பலதரப்புவாதத்தைச் செயல்படுத்தி, மேலும் நியானமான உலக மேலாண்மை அமைப்புமுறையின் உருவாக்கத்தை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.                                                      

Please follow and like us:

You May Also Like

More From Author