கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில், 6,018 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, ஆன்லைன் மூலம் முயற்சிகள் நடந்தன’ என, காங்., – எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக தேர்தல் அதிகாரி அன்புகுமார் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விரிவாக விளக்கம் அளித்தார். அதன் விபரம்:
கடந்த 2022ல், ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் அதிகாரிக்கு, 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்கும்படி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வந்தன.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், இது பற்றி உடனடியாக விசாரிக்கப்பட்டது. களத்திற்கு நேரடியாக சென்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அவற்றில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என்றும் தெரிந்தது. இதனால், அந்த விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டன.
மேலும், போலியாக வந்த விண்ணப்ப படிவங்களை அனுப்பியவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் கமிஷன் சார்பில் ஆலந்த் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தரப்பட்டது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆன்லைனில் போலியாக வரும் விண்ணப்பங்களை தவிர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ, திருத்தவோ வேண்டுமெனில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண் தரப்பட வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் கட்டாயமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தேர்தல் கமிஷனின் ஐ.டி., துறை பணியாற்றி வந்ததாகவும், ஆன்லைனில் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கோரும் திருத்தம் தற் போது மேம்படுத்தப்பட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நேர்மையான நியாயமான உலகளாவிய ஆட்சிமுறை அமைப்புமுறைமையை உருவாக்குவது பற்றிய சீனாவின் கொள்கைகள், முன்மொழிவுகள் மற்றும் செயல்கள் என்ற வெள்ளையறிக்கையை சீனா 17ஆம் நாள் [மேலும்…]
ஜுன் 19ம் நாள் சீனாவின் பாரம்பரிய டிராகன் படகு திருவிழா. இந்த விழா மட்டுமல்லாமல், பாரம்பரிய பண்பாட்டின் பாதுகாப்பிலும் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் [மேலும்…]
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யி 17ஆம் நாள் அழைப்பின் பேரில் ஈரான் வெளியுறவு அமைச்சரான அராக்சியினைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். இத்தொடர்பின் போது [மேலும்…]
திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டி: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி பொறுப்பேற்ற 35 நாட்களில், சட்டம் — ஒழுங்கு [மேலும்…]
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் [மேலும்…]