கர்நாடகாவின் ஆலந்த் சட்டசபை தொகுதியில், 6,018 வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க, ஆன்லைன் மூலம் முயற்சிகள் நடந்தன’ என, காங்., – எம்.பி., ராகுல் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடக தேர்தல் அதிகாரி அன்புகுமார் உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்து விரிவாக விளக்கம் அளித்தார். அதன் விபரம்:
கடந்த 2022ல், ஆலந்த் தொகுதி வாக்காளர் பட்டி யல் தயாரிக்கும் அதிகாரிக்கு, 6,018 வாக்காளர்களின் பெயர்களை நீக்கும்படி ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் வந்தன.
இது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், இது பற்றி உடனடியாக விசாரிக்கப்பட்டது. களத்திற்கு நேரடியாக சென்று ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.
அவற்றில் 24 விண்ணப்பங்கள் மட்டுமே உண்மையானவை என்றும், 5,994 விண்ணப்பங்கள் போலியானவை என்றும் தெரிந்தது. இதனால், அந்த விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்பட்டன.
மேலும், போலியாக வந்த விண்ணப்ப படிவங்களை அனுப்பியவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தேர்தல் கமிஷன் சார்பில் ஆலந்த் போலீஸ் ஸ்டேஷனில் புகாரும் தரப்பட்டது.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், ஆன்லைனில் போலியாக வரும் விண்ணப்பங்களை தவிர்க்க, வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்கவோ, சேர்க்கவோ, திருத்தவோ வேண்டுமெனில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் போன் எண் தரப்பட வேண்டும் என்பதை தேர்தல் கமிஷன் கட்டாயமாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக தேர்தல் கமிஷனின் ஐ.டி., துறை பணியாற்றி வந்ததாகவும், ஆன்லைனில் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் கோரும் திருத்தம் தற் போது மேம்படுத்தப்பட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது.
சீனா, தனது பிரம்மாண்டமான வரலாறு மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இயற்கை அழகால், ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளைத் தன்வசம் ஈர்த்து வருகிறது. [மேலும்…]
சென்னை : தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடி [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அதிகாரப்பூர்வ அரசுப் பயணமாக சனிக்கிழமை (ஜூன் 27) சீஷெல்ஸ் நாட்டிற்குப் புறப்பட்டு சென்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான [மேலும்…]
சென்னை தலைமைச் செயலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”2027ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மற்றும் மானியம் [மேலும்…]
பேரழிவை சந்தித்துள்ள வெனிசுலா நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) ரிக்டர் அளவில் 4.9 ஆகப் பதிவான மற்றுமொரு புதிய நிலநடுக்கம் [மேலும்…]
அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள், மெட்டா, அமேசான் போன்ற ஜாம்பவான்களைக் குறிவைத்து டிஜிட்டல் சேவை வரி விதிக்கத் திட்டமிட்டு வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு [மேலும்…]
அயர்லாந்து நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தங்களது முதல் டி20 சர்வதேசப் போட்டியில் அயர்லாந்து கிரிக்கெட் அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் [மேலும்…]