ஜூன் 2025இல் இந்தியாவில் முன்பதிவைத் தொடங்குகிறது வின்ஃபாஸ்ட்  

Estimated read time 1 min read

வியட்நாமிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்திய சந்தையில் நுழைய உள்ளது. அதன் VF6 மற்றும் VF7 மாடல்களுக்கான முன்பதிவுகள் இந்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரவிருக்கும் பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த மாடல்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள $2 பில்லியன் ஆலையில் உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வின்ஃபாஸ்ட் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஃபாம் சான் சாவ், அரசாங்க ஆதரவுடன் இந்த ஆலை வெறும் 15 மாதங்களில் நிறைவடைந்ததாகவும், எதிர்காலத்தில் ஆண்டுதோறும் 1,50,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author