9ஆவது சீன-தெற்காசியப் பொருட்காட்சி மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளைச் சீனா நடத்துவது, பிராந்திய கூட்டு ஒத்துழைப்புக்கு நன்மையளிப்பதோடு, செழுமையான வளர்ச்சிக்குரிய புதிய வாய்ப்புக்களைக் கொண்டு வரும் என்று இப்பொருட்காட்சியின் துவக்க விழாவில் பல நாடுகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இப்பொருட்காட்சி வழங்கும் முக்கிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சீனாவுடன், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பண்பாடு உள்ளிட்ட துறைகளிலுள்ள பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த இலங்கை பாடுபடும் என்று இலங்கையின் வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு வளர்ச்சித் துறை அமைச்சர் சமரசின்ஹ தெரிவித்தார்.
இப்பொருட்காட்சி, சீன, தெற்காசிய மற்றும் ஆசியானுக்கு இடையில், வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்துகொண்டு, நல்லிணக்கமான, தொடரவல்ல, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நனவாக்குவதற்கான சின்னமாகும் என்று வியட்நாம் துணைத் தலைமையமைச்சர் டிரான் ஹொங் ஹா தெரிவித்தார்.