வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்குமா?… தேர்தல் ஆணையம் விளக்கம்…!!! 

Estimated read time 1 min read

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக அமுல் கந்தசாமி இருந்தார். இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். ஒரு சட்டமன்றத் தொகுதி காலியானால் அடுத்து 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில் வால்பாறை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்தது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் கூறியதாவது வால்பாறை தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள் எம்எல்ஏ மறைந்தால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. தமிழக சட்டமன்ற பதவிக்காலம் மே 9-ம் தேதி முடிவடையும் நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author