தமிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான்.
அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளையே அடித்தளமாகக் கொண்டு காட்சிப்படுத்தும். அன்று முதல் இன்று வரை பாகுபாடின்றி கதைப் பிரியர்கள் விரும்பும் எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் இடம்பெறுவார்.
அவருடைய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி.
கேள்வி: உங்களுடைய நிறைய கதைகள் திரைப்படங்களாயிருக்கு. உங்க கதையும், திரைக்கதையும் ஒண்ணா இருந்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: ‘சிறை’யில அப்படியே இருந்திருக்கு. ‘ஒரு வீடு இரு வாசல்’ங்ற கதைல ஒரு வாசல் தான் என்னோடது, இன்னொரு வாசல் வேறொருத்தருடையது.
அதுல பால்காரி கதை என்னோடது. சின்னச் சின்ன விஷயங்கள் மாற்றம் இருக்கத்தான் செய்யும். அந்தப் படத்துல அந்தப் பொண்ணு தற்கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும். நான் எப்பவும் தற்கொலை முடிவைக் கொடுக்க மாட்டேன்.
என்னோட ரீடர்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. அது ஒண்ணுதான் முரண்பட்டது. இயக்குனர் கதையோட போக்குக்காக அப்படிப் பண்ணிட்டாரு.
கேள்வி: பெரும்பாலான கதைகள் நம்ம வாழ்க்கைல நடந்த மாதிரியே இருக்கும். அது மாதிரி உங்கக் கதைகள் யாருடைய வாழ்க்கையையாவது மாத்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: முதன் முதல்ல ‘புள்ளி பிசகிய கோலம்’னு தொடர்கதை எழுதினேன். கதையோட முடிவுல அவ தற்கொலைப் பண்ற மாதிரி வச்சுட்டேன். அதை ஒரு நெசவாளர் வீட்டுப் பெண் படிச்சிருக்காங்க.
‘‘அந்த கதைல வர்ற பொண்ணோட கதை மாதிரியே என் கதையும் இருந்துச்சு. நீங்க கதைல என்ன முடிவு கொடுக்குறீங்களோ அதுதான் என்னோட முடிவுனு நினைச்சுருந்தேன்.
நீங்க இப்படி கொடுத்ததால நானும் அந்த முடிவை ஏத்துக்குறேன்’’னு போஸ்ட் கார்டு போட்டிருந்தா. நான் அந்தக் கார்ட எடுத்துக்கிட்டு அந்தப் பொண்ணு வீட்டத் தேடி நானும், என் சிஸ்டரும் போனோம்.
அந்தப் பொண்ணு சேலத்துல இருந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனா, என் கதைல இருந்த நிறைய சம்பவங்கள் அவங்களுக்கு ஒத்துப் போயிருந்தது.
அப்புறம் அவங்களுக்கு என்ன கஷ்டம்னு பாத்துட்டு பணம் வாங்காத ஒரு வக்கீல் வச்சு அந்தப் பிரச்சினைல இருந்து மீள்றதுக்காக உதவி பண்ணிட்டு அவகிட்ட ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.
இனி எந்தப் பெண்ணையும் தற்கொலை முடிவுக்குத் தள்ளமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். முப்பது வருஷமா அந்த சத்தியத்த காப்பாத்திட்டு இருக்கேன். வாசகர்கள்தானே என்னோட நாடித்துடிப்பே.
74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்குச் சுற்றுலா வரலாம் என்று சீனா அறிவித்துள்ளது. சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத [மேலும்…]
முன்னாள் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆட்சி மற்றும் நிர்வாகத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறி புதிய அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளார். செவ்வாயன்று [மேலும்…]
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய டிஜிட்டல் பதிப்பாக தனுஷ் படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் – [மேலும்…]
சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் உள்ளூர் நேரப்படி ஜூலை 9ஆம் நாளில், கெய்ரோவில், அரபு நாடுகள் லீக்கின் தலைமைச் செயலாளர் அஹ்மத் அபல் ஹெய்டுடன் சந்திப்பு [மேலும்…]
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் மார்ஷல் என்ற துறைமுக நகர் அமைந்துள்ளது. அங்கு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டு அந்த நகர் முழுவதும் பரவியதால் விமானம், [மேலும்…]
முன்னாள் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கோல்ட்மேன் சாக்ஸில் மீண்டும் மூத்த ஆலோசகராக இணைந்துள்ளார். இது அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நிதித் துறைக்குத் [மேலும்…]