தமிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான்.
அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளையே அடித்தளமாகக் கொண்டு காட்சிப்படுத்தும். அன்று முதல் இன்று வரை பாகுபாடின்றி கதைப் பிரியர்கள் விரும்பும் எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் இடம்பெறுவார்.
அவருடைய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி.
கேள்வி: உங்களுடைய நிறைய கதைகள் திரைப்படங்களாயிருக்கு. உங்க கதையும், திரைக்கதையும் ஒண்ணா இருந்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: ‘சிறை’யில அப்படியே இருந்திருக்கு. ‘ஒரு வீடு இரு வாசல்’ங்ற கதைல ஒரு வாசல் தான் என்னோடது, இன்னொரு வாசல் வேறொருத்தருடையது.
அதுல பால்காரி கதை என்னோடது. சின்னச் சின்ன விஷயங்கள் மாற்றம் இருக்கத்தான் செய்யும். அந்தப் படத்துல அந்தப் பொண்ணு தற்கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும். நான் எப்பவும் தற்கொலை முடிவைக் கொடுக்க மாட்டேன்.
என்னோட ரீடர்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. அது ஒண்ணுதான் முரண்பட்டது. இயக்குனர் கதையோட போக்குக்காக அப்படிப் பண்ணிட்டாரு.
கேள்வி: பெரும்பாலான கதைகள் நம்ம வாழ்க்கைல நடந்த மாதிரியே இருக்கும். அது மாதிரி உங்கக் கதைகள் யாருடைய வாழ்க்கையையாவது மாத்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: முதன் முதல்ல ‘புள்ளி பிசகிய கோலம்’னு தொடர்கதை எழுதினேன். கதையோட முடிவுல அவ தற்கொலைப் பண்ற மாதிரி வச்சுட்டேன். அதை ஒரு நெசவாளர் வீட்டுப் பெண் படிச்சிருக்காங்க.
‘‘அந்த கதைல வர்ற பொண்ணோட கதை மாதிரியே என் கதையும் இருந்துச்சு. நீங்க கதைல என்ன முடிவு கொடுக்குறீங்களோ அதுதான் என்னோட முடிவுனு நினைச்சுருந்தேன்.
நீங்க இப்படி கொடுத்ததால நானும் அந்த முடிவை ஏத்துக்குறேன்’’னு போஸ்ட் கார்டு போட்டிருந்தா. நான் அந்தக் கார்ட எடுத்துக்கிட்டு அந்தப் பொண்ணு வீட்டத் தேடி நானும், என் சிஸ்டரும் போனோம்.
அந்தப் பொண்ணு சேலத்துல இருந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனா, என் கதைல இருந்த நிறைய சம்பவங்கள் அவங்களுக்கு ஒத்துப் போயிருந்தது.
அப்புறம் அவங்களுக்கு என்ன கஷ்டம்னு பாத்துட்டு பணம் வாங்காத ஒரு வக்கீல் வச்சு அந்தப் பிரச்சினைல இருந்து மீள்றதுக்காக உதவி பண்ணிட்டு அவகிட்ட ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.
இனி எந்தப் பெண்ணையும் தற்கொலை முடிவுக்குத் தள்ளமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். முப்பது வருஷமா அந்த சத்தியத்த காப்பாத்திட்டு இருக்கேன். வாசகர்கள்தானே என்னோட நாடித்துடிப்பே.
சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், சிங்கப்பூர் தலைமையமைச்சர் லாரன்ஸ் வோங்குடன், அக்டோபர் 25ஆம் நாள் சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது லீ ச்சியாங் கூறுகையில், [மேலும்…]
பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது [மேலும்…]
ஆண்டுதோறும் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற சூரசம்ஹாரம் சடங்கு, திங்கட்கிழமை (அக்டோபர் 27) மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள [மேலும்…]
காக்கிநாடாவில் கடக்கும் மோந்தா புயல் காரணமாக புதுச்சேரி ஏனாம் பிராந்தியத்தில் மூன்று நாட்களுக்கு பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு பள்ளிகளும் நிவாரண [மேலும்…]
அண்டை நாடுகளுக்கிடையில் வளர்ந்து வரும் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தங்கள் முக்கியமான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையை சனிக்கிழமை (அக்டோபர் 25) [மேலும்…]
பத்து நாட்களுக்குப் பிறகு குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை [மேலும்…]
பொதுவாக கீரை வகைகளில் நமக்கு தேவையான விட்டமின்களும் தாதுக்களும் நிரம்பியுள்ளது .இந்த கீரை வகைகளில் நமக்கு தேவையான இரும்பு சத்து ,கால்சியம் சத்து ,மற்றும் [மேலும்…]