தமிழ் உலகின் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான்.
அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளையே அடித்தளமாகக் கொண்டு காட்சிப்படுத்தும். அன்று முதல் இன்று வரை பாகுபாடின்றி கதைப் பிரியர்கள் விரும்பும் எழுத்தாளர்களில் அனுராதா ரமணனும் இடம்பெறுவார்.
அவருடைய நேர்காணலிலிருந்து ஒரு பகுதி.
கேள்வி: உங்களுடைய நிறைய கதைகள் திரைப்படங்களாயிருக்கு. உங்க கதையும், திரைக்கதையும் ஒண்ணா இருந்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: ‘சிறை’யில அப்படியே இருந்திருக்கு. ‘ஒரு வீடு இரு வாசல்’ங்ற கதைல ஒரு வாசல் தான் என்னோடது, இன்னொரு வாசல் வேறொருத்தருடையது.
அதுல பால்காரி கதை என்னோடது. சின்னச் சின்ன விஷயங்கள் மாற்றம் இருக்கத்தான் செய்யும். அந்தப் படத்துல அந்தப் பொண்ணு தற்கொலை செஞ்சுக்குற மாதிரி இருக்கும். நான் எப்பவும் தற்கொலை முடிவைக் கொடுக்க மாட்டேன்.
என்னோட ரீடர்ஸ் எல்லாம் என்கிட்ட கேட்டாங்க. அது ஒண்ணுதான் முரண்பட்டது. இயக்குனர் கதையோட போக்குக்காக அப்படிப் பண்ணிட்டாரு.
கேள்வி: பெரும்பாலான கதைகள் நம்ம வாழ்க்கைல நடந்த மாதிரியே இருக்கும். அது மாதிரி உங்கக் கதைகள் யாருடைய வாழ்க்கையையாவது மாத்திருக்கா?
அனுராதா ரமணன் பதில்: முதன் முதல்ல ‘புள்ளி பிசகிய கோலம்’னு தொடர்கதை எழுதினேன். கதையோட முடிவுல அவ தற்கொலைப் பண்ற மாதிரி வச்சுட்டேன். அதை ஒரு நெசவாளர் வீட்டுப் பெண் படிச்சிருக்காங்க.
‘‘அந்த கதைல வர்ற பொண்ணோட கதை மாதிரியே என் கதையும் இருந்துச்சு. நீங்க கதைல என்ன முடிவு கொடுக்குறீங்களோ அதுதான் என்னோட முடிவுனு நினைச்சுருந்தேன்.
நீங்க இப்படி கொடுத்ததால நானும் அந்த முடிவை ஏத்துக்குறேன்’’னு போஸ்ட் கார்டு போட்டிருந்தா. நான் அந்தக் கார்ட எடுத்துக்கிட்டு அந்தப் பொண்ணு வீட்டத் தேடி நானும், என் சிஸ்டரும் போனோம்.
அந்தப் பொண்ணு சேலத்துல இருந்தாங்க. ரொம்ப ஏழ்மையான குடும்பம். ஆனா, என் கதைல இருந்த நிறைய சம்பவங்கள் அவங்களுக்கு ஒத்துப் போயிருந்தது.
அப்புறம் அவங்களுக்கு என்ன கஷ்டம்னு பாத்துட்டு பணம் வாங்காத ஒரு வக்கீல் வச்சு அந்தப் பிரச்சினைல இருந்து மீள்றதுக்காக உதவி பண்ணிட்டு அவகிட்ட ஒரு சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டு வந்தேன்.
இனி எந்தப் பெண்ணையும் தற்கொலை முடிவுக்குத் தள்ளமாட்டேன்னு சொல்லிட்டு வந்தேன். முப்பது வருஷமா அந்த சத்தியத்த காப்பாத்திட்டு இருக்கேன். வாசகர்கள்தானே என்னோட நாடித்துடிப்பே.
நாசாவின் ஹப்பிள் (Hubble) மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் யூக்ளிட் (Euclid) தொலைநோக்கிகள் இணைந்து, இறந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தின் இறுதித் தருணங்களை மிகத் [மேலும்…]
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல், ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே [மேலும்…]
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பால் கன்னிங்ஹாம் என்ற தொழில்நுட்பத் தொழில்முனைவோர், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கருவிகளான சாட்ஜிபிடி மற்றும் ஆல்பாஃபோல்ட் ஆகியவற்றைப் பயன்படுத்தி, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட [மேலும்…]
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசு தலைவருமான ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை, கடல் பொருளாதாரத்தின் உயர்தர வளர்ச்சியை ஊக்குவித்தல் [மேலும்…]
மாற்றங்கள் மற்றும் குழப்பங்கள் நிறைந்திருக்கும் சர்வதேச சமூகத்தில் நிலைத்தன்மையே பல்வேறு நாடுகள் தேடி வரும் அரிதான பொருள். வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கு [மேலும்…]
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார். அதன்படி வரும் 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு [மேலும்…]
ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கவும் அமெரிக்கா தலைமையிலான ‘பல்தேசியக் கூட்டணியில்’ இந்தியா இணைவதற்கு வாய்ப்பில்லை [மேலும்…]