ரஷ்யா வர்த்தகம்: நேட்டோவின் இரட்டை நிலைப்பாட்டை சாடிய இந்தியா  

Estimated read time 0 min read

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா போன்ற நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே எச்சரித்ததைத் தொடர்ந்து, நேட்டோவிற்கு இந்தியா கடுமையான எச்சரிக்கையை விடுத்தது.
மார்க் ரூட்டேவின் கருத்துகளுக்கு பதிலளித்த இந்தியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எரிசக்தி தேவைகளைப் பாதுகாப்பதில் இந்தியாவின் முன்னுரிமையை வலியுறுத்தினார் மற்றும் உலகளாவிய வர்த்தக நடைமுறைகளில் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுவதாக விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்க செனட்டர்களுடனான ஒரு சந்திப்பின் போது, இந்தியா, சீனா மற்றும் பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவுடனான வணிக உறவுகளைக் குறைக்காவிட்டால் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மார்க் ரூட்டே கூறியிருந்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author