பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகள், நேபாளத்துடனான அதன் திறந்த எல்லை வழியாக பீகார் மாநிலத்திற்குள் நுழைந்ததாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளது.
இதையடுத்து பீகார் காவல்துறை தலைமையகம் (PHQ) மாநிலம் முழுவதும் உயர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக இந்த ஊடுருவல் கடுமையான பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளது.
காவல்துறை வட்டாரங்களின்படி, அந்த மூன்று நபர்களும் ராவல்பிண்டியைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, உமர்கோட்டைச் சேர்ந்த ஆதில் ஹுசைன் மற்றும் பஹவல்பூரைச் சேர்ந்த முகமது உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களின் பெயர்கள், புகைப்படங்கள் மற்றும் கடவுச்சீட்டு விவரங்கள் ஆகியவை எல்லை மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நேபாளம் வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவல் என தகவல்
