நான் கோடிகளில் சம்பாதிக்கிறேன்.. ஆனா ‘அந்த’ பிரச்சனை என்னை விடலை! – மனம்திறந்து யதார்த்தம் பேசிய மக்கள் செல்வன் சொன்ன ஷாக் தகவல்! 

Estimated read time 0 min read

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தனது வாழ்க்கையில் உள்ள சவால்கள் குறித்து அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மனம் திறந்து பேசியுள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘டிரெயின்’ படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வரும் அவர், ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்குத் தகுந்த கடன் இருந்தது. தற்போது கோடிகளில் சம்பாதித்தாலும், அந்தக் கடன் பிரச்சினை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால், அதனுடனேயே வாழக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வதுதான் சவால்” என்று விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

கடன் பிரச்சினை என்பது தனது சம்பளத்தின் அளவுக்கு ஏற்ப எப்போதும் நீடித்துக்கொண்டே இருக்கிறது என்ற யதார்த்தத்தை அவர் உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author