நிலவின் தென் துருவப் பகுதிக்கு அருகிலுள்ள பிளாஸ்மா மிகவும் சுறுசுறுப்பாக உள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
நிலவின் தென்துருவத்தை சந்திரயான் -3 விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. நிலவின் தென்துருவத்தில் ஜூலை மாதம் 23ம் தேதி விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.
அதன்பிறகு அடுத்த 4 மணிநேரத்தில் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வாகனம் வெளியே வந்து நிலவின் மேற்பரப்பில் கால்பதித்தது.
அப்போது தென்துருவத்தில் பிளாஸ்மா இருப்பது கண்டறியப்பட்டது. இந்தச் சூழலில், அது மிகவும் சுறுசுறுப்பாகஉள்ளதாகத் தெரியவந்துள்ளது.
