தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரெயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல போத்தனூர் -சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி போத்தனூரில் இருந்து 13, 20-ந் தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:06024) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14, 21-ந் தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை- போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண்: 06026) செங்கோட்டையில் இருந்து 14-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும். மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.இந்த ரெயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்பு ரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
தட்கல் (Tatkal) டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் மையங்களில் தற்போது பெருமளவிலான கூட்டத்தைக் காண முடிகிறது. டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே பயணிகள் அதிக எண்ணிக்கையில் [மேலும்…]
இந்தியாவில் சொந்தமாக ஒன்றுக்கும் மேற்பட்ட அல்லது இரண்டு வீடுகள் வைத்திருக்கும் தனிநபர்கள், தங்களது வருமான வரித் தாக்கலை (ஐடிஆர்) செய்யும்போது பின்பற்ற வேண்டிய விதிகள் [மேலும்…]
நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத் தொகுப்புகள், பயணக் கட்டுரை நூல்கள் என எழுத்தாளர் வாஸந்தியின் ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இவர் குறிப்பிடத்தக்க [மேலும்…]
2004ஆம் ஆண்டு இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படமான ‘கில்லி’.ஆக்ஷன், காமெடி, காதல் என அனைத்தும் [மேலும்…]
இந்தியா – சீனா இடையிலான எல்லை பகுதிகளில் பதற்றத்தை தணிக்கும் நம்பிக்கை கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிக்கிமில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாதுலா கணவாய் [மேலும்…]
இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்களது கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் [மேலும்…]
இவ்வாண்டில் சீனத் தயாரிப்புகளின் ஏற்றுமதி பெயர் பட்டியலில் மேலதிக புதிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன், மின்சார வாகனம், லித்தியம் மின்கலம், சூரிய [மேலும்…]