தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவையில் இருந்து வருகிற 11, 18-ந் தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் கோவை – சென்னை சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06034) மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை செல்லும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து ஜனவரி 12, 19-ந் தேதிகளில் இரவு 11.25 மணிக்கு புறப்படும் சென்னை-கோவை விரைவு ரெயில் (எண்:06033) மறுநாள் காலை 9 மணிக்கு கோவை வந்தடையும்.இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அதேபோல போத்தனூர் -சென்னை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி போத்தனூரில் இருந்து 13, 20-ந் தேதிகளில் இரவு 12.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்:06024) மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்றடையும்.
சென்னையில் இருந்து ஜனவரி 14, 21-ந் தேதிகளில் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06023) இரவு 11.15 மணிக்கு போத்தனூர் வரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக் கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை- போத்தனூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரெயில் (எண்: 06026) செங்கோட்டையில் இருந்து 14-ந்தேதி இரவு 8.45 மணிக்கு புறப்படும். மறுநாள் இரவு 7.30 மணிக்கு போத்தனூர் வந்தடையும்.இந்த ரெயில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்பு ரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர், பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சங்க இலக்கியங்களைப் பெருமளவு பதிப்பித்து வெளியிட்ட பெருமை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தைச் சேரும். இக்கழகத்தின் ஆட்சியாளராக இருந்த வ.சுப்பையாபிள்ளை அவர்கள் தேர்ந்த உரையாசிரியர்களைக் [மேலும்…]
பிரபல பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் சாலமன் பாப்பையா (90) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். சன் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 [மேலும்…]
விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையால் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானக் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. வார விடுமுறை மற்றும் விநாயகர் [மேலும்…]
சென்னை : “அன்பு தாய்மார்களே, அருமை பெரியோர்களே, இனிய குழந்தைகளே” என்று பட்டிமன்ற மேடைகளில் தனது கணீர்க்குரலால் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்களைக் [மேலும்…]
தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், [மேலும்…]
இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நுவரெலியாவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். [மேலும்…]
சென்னை மாநகரில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வந்த சுமார் 70 ரவுடிகளை, ஒரே இரவில் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் [மேலும்…]
இந்தியா – ஜப்பான் நாடுகளின் 75 வருட உறவைக் கொண்டாடும் வகையில், வரும் செப்டம்பர் 22 அன்று ஜப்பானில் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா [மேலும்…]