பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபீந்திர புர்காயஸ்தா (94), வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஜனவரி 7) காலமானார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. அசாமில் பாஜகவை வலுப்படுத்திய முக்கியத் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவரது மறைவு, அந்த மாநில அரசியலில் ஒரு பேரிழப்பாகப் பார்க்கப்படுகிறது.
அவரது மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காகவும் அவர் ஆற்றிய பங்களிப்பைத் தலைவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
ஒரு சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், மக்கள் தலைவராகவும் விளங்கிய கபீந்திர புர்காயஸ்தாவின் மறைவு பாஜக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
